search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ் மருத்துவமன"

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
    சென்னை :

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது:–

    ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள். ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யர்களின் கூடாரம் மத்திய–மாநில அரசுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் மதுரையை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவேற்றம் செய்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
    ×